Iraivan Irandu Bommaigal

Iraivan Irandu Bommaigal Song Lyrics In English


இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு
பொம்மையை செய்தன தாம் விளையாட

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு
பொம்மையை செய்தன தாம் விளையாட

உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை
உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு
பொம்மையை செய்தன தாம் விளையாட

வெய்யில் என்ன மின்னல் என்ன
வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில்
எல்லாமும் ஒன்றடா

வெய்யில் என்ன மின்னல் என்ன
வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில்
எல்லாமும் ஒன்றடா

தென்றல் காற்றும் ஊமைக் காற்று
தேவன் பாட்டும் ஊமைப் பாட்டு
அவன் தானே நம்மைச் செய்தான்
துன்பங்கள் ஏனடா

உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை
உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு
பொம்மையை செய்தன தாம் விளையாட

உங்களுக்காக நானே சொல்வேன்
உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப் போனால்
பூசாரி இல்லையா


உங்களுக்காக நானே சொல்வேன்
உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப் போனால்
பூசாரி இல்லையா

தந்தை பேச்சு தாய்க்கு புரியும்
தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
தந்தை பேச்சு தாய்க்கு புரியும்
தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
உள்ளத்தில் நல்லோர் தானே
உயர்ந்தவர் இல்லையா

என் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு
பொம்மையை செய்தன தாம் விளையாட

மலரும் போதே வாசம் தெரியுது
வளரும் போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை
வீணாகவில்லையே

மலரும் போதே வாசம் தெரியுது
வளரும் போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை
வீணாகவில்லையே

கந்தன் அன்று மந்திரம் சொன்னான்
கண்ணன் அன்று கீதை சொன்னான்
மகன் சொன்ன வேதம் கேட்டு
மறைந்தது தொல்லையே

உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை
உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை

இருவர் : இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு
பொம்மையை செய்தன தாம் விளையாட
உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை
உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை