Iraivan Irukkindrana |
---|
இறைவன் இருக்கின்றானா ஆ
இறைவன் இருக்கின்றானா
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்
நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை
மனிதன் இருக்கிறானா ஆஆ
மனிதன் இருக்கிறானாஆ
இறைவன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்
நான் அன்பு காட்டினேன்
அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும்
அவன் துணை வரவில்லை
கண்ணிலே உறுதி இல்லை
காதலுக்கோர் நீதியில்லை
ஒரு நாள் இருந்த
மறு நாள் இருக்கவில்லை
குடிசையில் ஓர் மனது
கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கை எல்லாம்
கூடினால் பல மனது
மனிதன் இருக்கிறானா ஆ
பார்ப்பவன் குருடனடி
படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே
உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி
நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று
கண்ணாடி காட்டுதடி
இறைவன் இருக்கின்றானா ஆ
ஒன்றையே நினைத்திருந்தும்
ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை
கண்ணாக யார் நினைத்தார்
இருந்தால் இருந்த இடம்
இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதரென்றால்
இயற்கையும் நின்று விடும்
மனிதன் இருக்கிறானா ஆ
சந்தேகம் பிறந்து விட்டால்
சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவரும்
சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை
மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு
வாழ்பவன் இறைவன் இல்லை
இறைவன் இருக்கின்றானாஆ
மனிதன் இருக்கிறானாஆ
இறைவன் இருக்கின்றானா
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்