Iravil Orr Poonguyil |
---|
இரவில் ஓர் பூங்குயில் இசைக்கிறாள் அழைக்கிறாள் இதயம் ஓர் ஊஞ்சலில் மிதக்கலாம் பொழுதெல்லாம்
இளமை ஓர் வானவில் மனிதரின் வாழ்க்கையில் இருக்கையில் ரசிக்கலாம்
இரவில் ஓர் பூங்குயில் இசைக்கிறாள் அழைக்கிறாள் இதயம் ஓர் ஊஞ்சலில் மிதக்கலாம் பொழுதெல்லாம்
இளமை ஓர் வானவில் மனிதரின் வாழ்க்கையில் இருக்கையில் ரசிக்கலாம்
இசைக்கும் எனக்கும் உறவு இறைவன் கொடுத்த வரவு இசைக்கும் எனக்கும் உறவு இறைவன் கொடுத்த வரவு
பாடல் ஆயிரம் பாடும் வானம்பாடியும் நான் நாத வெள்ளமாய் ஓடும் ராகமாளிகை நான் அவரவர் ரசனையில் அருந்திடலாம் அவரவர் ரசனையில் அருந்திடலாம்
இரவில் ஓர் பூங்குயில் இசைக்கிறாள் அழைக்கிறாள் இதயம் ஓர் ஊஞ்சலில் மிதக்கலாம் பொழுதெல்லாம்
மலரும் வளரும் வசந்தம் சுகமும் சுவையும் அணங்கும் மலரும் வளரும் வசந்தம் சுகமும் சுவையும் அணங்கும்
நீல மேகம் போல் நீந்தும் நினைவு மேகமே வா காலகாலமாய் வாழும் காதல் ராகமே வா இசையெனும் மழையினில் நனைந்திடலாம் இசையெனும் மழையினில் நனைந்திடலாம்
இரவில் ஓர் பூங்குயில் இசைக்கிறாள் அழைக்கிறாள் இதயம் ஓர் ஊஞ்சலில் மிதக்கலாம் பொழுதெல்லாம்
இளமை ஓர் வானவில் மனிதரின் வாழ்க்கையில் இருக்கையில் ரசிக்கலாம்