Iru Kangal Podhadhu Sad

Iru Kangal Podhadhu Sad Song Lyrics In English


இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் நெஞ்சம் தாங்காது
நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

தாமரையை மண் மூடவோ
தீயிடமே மலர் போவதோ
என்ன சொல்ல எல்லாம் விதியோ

இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் நெஞ்சம் தாங்காது
நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஓராயிரம் துக்கம் வந்து
அடைக்குது நெஞ்சத்தில்
சொல்லிச் சொல்லி அழுதாலும் தீராது
ஓராயிரம் ஜென்மம் ஒன்றாய்
வாழ்ந்தது போலிருக்கு
சொல்லாமல் சென்றதினி வாராது

கண் இன்று காணும் காட்சி
பொய்யாகிப் போகாதோ
குயிலே உன் குரலை மீண்டும்
நான் கேட்க முடியாதோ
சொல் எங்கே சென்றதுன் ஆவி
அடி உண்மையில் நான் ஒரு பாவி
இதை என் நெஞ்சம் தாங்காது

இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் நெஞ்சம் தாங்காது
நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

கண்ணே உன் முகத்தில் விழித்தால்
எனக்கந்த நாள் விடியும்
உனைத் தேடும் கண்கள் இனி உறங்காது
கண்ணே யார் இந்த சோகத்துக்கு
ஆறுதல் சொன்னாலும்
நெஞ்சில் உள்ள பாரம் என்றும் இறங்காது


பாசத்தைக் கொன்ற அந்த
பாவிகள் யாரம்மா
யாரவர் என்றே எந்தன்
கனவிலேனும் கூறம்மா
எனை விட்டுப் போனது பாவம்
நீ போனது எப்படி நியாயம்
இதை என் நெஞ்சம் தாங்காது

இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் நெஞ்சம் தாங்காது
நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

தாமரையை மண் மூடவோ
தீயிடமே மலர் போவதோ
என்ன சொல்ல எல்லாம் விதியோ

இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் நெஞ்சம் தாங்காது
நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் நெஞ்சம் தாங்காது
நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க