Irukkumidam |
---|
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
இந்த ஏழை உன் சந்நிதியில்
வர வேண்டும் தலைவா
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
இந்த ஏழை உன் சந்நிதியில்
வர வேண்டும் தலைவா
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
பொறுப்பதற்கு நேரமில்லை
பொங்கி எழுகிறேன்
பொறுப்பதற்கு நேரமில்லை
பொங்கி எழுகிறேன்
பூங்கொடியின் நாயகனே காதல் மணவாளா
பூங்கொடியின் நாயகனே காதல் மணவாளா
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
வானகத்தில் ஓடிவரும்
பறவைகளைக் கேட்டேன்
வழி மீது விழி வைத்துத்
தேடித் தேடிப் பார்த்தேன்
வானகத்தில் ஓடிவரும்
பறவைகளைக் கேட்டேன்
வழி மீது விழி வைத்துத்
தேடித் தேடிப் பார்த்தேன்
கானகத்து வேடரையும்
கண்டு நான் கேட்டேன்
கானகத்து வேடரையும்
கண்டு நான் கேட்டேன்
கண்ணாஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ
கண்ணா உன் திருவுருவம் எங்கேயும் இல்லை
எங்கேயும் இல்லை
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
இருக்கின்றாய் என்பதனால்
இவ்வளவும் கேட்டேன்
இருக்கின்றாய் என்பதனால்
இவ்வளவும் கேட்டேன்
இல்லையென முடிவானால் கதறவே மாட்டேன்
இல்லையென முடிவானால் கதறவே மாட்டேன்
ஐயா உன் கண்களிலே ஒளி பிறக்காதோ
ஐயா உன் திருவாயில் வார்த்தை வராதோ
ஐயா உன் கை கால்கள் அசைய மாட்டாதோ
ஐயா உன் அடிமையினை அணைக்க மாட்டாயோ
ஹோ ஓஒ ஓ ஓ ஹோ