Irul Vaanam |
---|
இருள் வானம்
வழி காட்டிடும்
நம் காதல்
துணை ஆகிடும்
இந்த கருக்கினில்
மலருது யுகமே
இன்பக் கருப்புகள்
தனிமையின் மயமே
எம்மானே
மலையுறும் நதியினை போல்
அடைந்தேன் கடலை நான்
தலைவனின் நிழலினிலே
மலரும் குவளை நான்
காதல் பொதுவாகும்
நமை காக்கும் ஓ
யாரும் மனம் மாற
இது போதும்
விளைவாய் வருவாய் குழைவாய்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பொழிந்திடும் நிலவினிலே
நனைந்தேன் அருகில் நான்
வழிந்திடும் ஒளியினிலே
கரைவோம் உருகி நாம்
காதல் நமை தேற்றும்
மடை மாற்றும்
இந்த வாழ்க்கை புயல் காட்டும்
அதை மாற்றும்
துணையாய் இணையாய் வருவாய்
இருள் வானம்
வழி காட்டிடும்
நம் காதல்
துணை ஆகிடும்
இரவுகள் மிளிர்கிறதே
அழகாய் உறவில்தான்
கதவுகள் திறக்கிறதே
இணைந்தால் இதயம்தான்
தேடல் நிறைவேறும்
கரையேறும்
பெண் தோளில் மலை சாய்ந்து
இளைப்பாறும்
அடலேறே நீ வருவாய்
இருள் வானம்
வழி காட்டிடும்
நம் காதல்
துணை ஆகிடும்
இந்த கருக்கினில்
மலருது யுகமே
இன்ப கருப்புகள்
தனிமையின் மயமே
எம்மானே