Iruppathai Yen Maranthu |
---|
இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ
இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ
மறைத்ததை ஏன் தெரிய
வைத்தாய் ஆண்டவா
என்ன உந்தன் கணக்கு
இன்னும் சொந்தம் என்ன எனக்கு
மனம் போல் நடத்து நடத்து
இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ
மறைத்ததை ஏன் தெரிய
வைத்தாய் ஆண்டவா
அன்னை ஒரு தெய்வம்
என்று ஊரு சொல்லும் தாயே
உண்மை இல்லை சொன்னதென்று
ஆக்கலாமோ நீயே
வெண்ணிலவை காட்டி வைத்து
சோறு தந்ததுண்டா
தோளில் ஒரு தூளியிட்டு
பாட்டு சொன்னதுண்டா
ஐயிரண்டு மாதத்தோடு
உந்தன் பாரம் போச்சு
எந்தன் ஆவி கூட என்றும்
ஜென்ம பாரம் ஆச்சு
இந்த சோகமும் துன்ப ராகமும்
ஆற்றிடவும் தேற்றிடவும்
யாரோ யாரோ
என் கண்களில் நீரோ
இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ
மறைத்ததை ஏன் தெரிய
வைத்தாய் ஆண்டவா
என்ன உந்தன் கணக்கு
இன்னும் சொந்தம் என்ன எனக்கு
மனம் போல் நடத்து நடத்து
இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ
மறைத்ததை ஏன் தெரிய
வைத்தாய் ஆண்டவா