Isai Paadu Nee |
---|
ஆஆஆஆஆஆஅ
இசை பாடு நீ இளம் தென்றலே
இளவேனில்தான் இந்நாளிலே
உருவாகும் சுகமான ராகம்
நான் கொண்ட காதல் நலமானது
பொட்டோடு பூச்சூடும் நாள்
இசை பாடு நீ இளம் தென்றலே
இளவேனில்தான் இந்நாளிலே
நெடும் காலம் எதிர் பார்த்த
என் தேவன் வந்தான்
நான் கேட்ட வரம் யாவும் தந்தான்
நெடும் காலம் எதிர் பார்த்த
என் தேவன் வந்தான்
நான் கேட்ட வரம் யாவும் தந்தான்
மணவாளன் கூட மடி ஊஞ்சல் ஆட
பாலோடு தேனும் விழி மீது ஓட
சுதியும் லயமும்
விலகாமல் உறவாடும் பொழுதல்லவோ
இசை பாடு நீ இளம் தென்றலே
இளவேனில்தான் இந்நாளிலே
ஸாஸஸ பாபப மபமப
கா கமகா
கமபம கமகம ரீ
ஸஸரீ ஸஸ ஸஸகா ஸஸரீ
ஸஸ கமபா
கமபத பதபத பதபம
கமபத பத பநிஸா
யார் யார்க்கு யார் என்று
தெய்வங்கள் சொல்லும்
அதுதானே முடிவாக வெல்லும்
யார் யார்க்கு யார் என்று
தெய்வங்கள் சொல்லும்
அதுதானே முடிவாக வெல்லும்
மனம் போல வாழ்வு எனை வந்து சேர
மகராஜன் கைகள் மாங்கல்யம் சூட
இரவும் பகலும்
தொடர்கின்ற ஆனந்தம் இதுவல்லவோ
இசை பாடு நீ இளம் தென்றலே
இளவேனில்தான் இந்நாளிலே
உருவாகும் சுகமான ராகம்
நான் கொண்ட காதல் நலமானது
பொட்டோடு பூச் சூடும் நாள்
இசை பாடு நீ இளம் தென்றலே