Isaiyai Thamizhai

Isaiyai Thamizhai Song Lyrics In English


இசையாய்
தமிழாய்
இருவர் : இருப்பவனேஆஆஆ
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே
நிலைப்பவனே
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

இருவர் : பொன்னெழில் மேனியில் பூசிய வெந்நீரும்
பூந்தளிர் மலர் மாலையும்
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
பொன்னெழில் மேனியில் பூசிய வெந்நீரும்
பூந்தளிர் மலர் மாலையும்
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்

வானவர்

ஞானியர்

வாழ்த்திடும்

வடிவினை உடையாய்

அருட்பெரும் சுடராய்

இருவர் : அடியவர் மனதினிலே
இசையாய் செந்தமிழாய் இருப்பவனேஆஆஆ
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனேநிலைப்பவனே
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

நந்தி தேவனொடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே

ஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ

நந்தி தேவனொடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே

தந்தி மாமுகனும் விந்தை வேல் முகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே

ஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ

நந்தி தேவனொடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே

எந்தவேளையும் மறந்திடாது
மறைசிந்து நான்முகன் பணிந்திடவே

சந்தமார்குழலி இந்துநேர்வதனி
மங்களாம்பிகை மகிழ்ந்திடவே


கவினுறு முகமதில் இளநகையே

கனிவுறு விழிகளில் அருள் மழையே

சுவைபட வருவதும் எதிர் சுரமே

துணையென மொழிவதும் உயர்தமிழே

மந்திரமாய்

மாதவமாய்

தந்திரமாய்

தாரகமாய்

இருவர் : வழிபடும் அடியவர் இருவினை பொடிபட
மழுமதி தழுவிடும் இனிய அபயகரமும்
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்

வானவர்

ஞானியர்

வாழ்த்திடும்

வடிவினையுடையாய்

அருட்பெரும் சுடராய்

இருவர் : அடியவர் மனதினிலே
இசையாய் தமிழாய் இருப்பவனேஆஆஆ
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனேநிலைப்பவனே
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே