Isaiyinile Ragam Pala Nooru

Isaiyinile Ragam Pala Nooru Song Lyrics In English


பாடகி : பி சுஷீலா

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

லாலாலலலாலாஆஆ லாலாலலலாலாலல லலலலல் லாஆஆ

இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு

நாள் தோறும் இங்கே நான் பாடும்போது தேனள்ளி தூவும் சுக ராகமே

இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு

மேடை தனி மேடை மனமென்னும் மேடை ஆசை தரும் நினைவுகள் ஆடும் மேடை நேரம் என்னேரம் பொன்னான நேரம் பாடுகிறேன் சுவையுடன் பாவை நானே

கை வளை தரும் ஓசை கனிவோடு கொஞ்ச கை வளை தரும் ஓசை கனிவோடு கொஞ்ச பாடிடும் குயில் இனிய இசை புதிய அரங்கிலே


இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு

கீதம் என் கீதம் சங்கீதமாகும் பூவிழியின் ஜாடையில் கோடி பாவம் பாவை பெண் பாவை பண்பாடும் பூவை ஏழு ஸ்வரம் இன்னிசை கோலம் போடும்

தை மகள் நடையோடு நெஞ்சில் வந்து கொஞ்ச தை மகள் நடையோடு நெஞ்சில் வந்து கொஞ்ச பாடிடும் குயில் இனிய இசை புதிய அரங்கிலே (இசை)

இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு

நாள் தோறும் இங்கே நான் பாடும்போது தேனள்ளி தூவும் சுக ராகமே

இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு