Ithayame Oh |
---|
இதயமேஇதயமே
எழுந்து வா ஏன் மயக்கமே
எதையும் தாங்கிடும் இதயம் அல்லவா
எழுந்து வா
உதய வெள்ளி போல் ஒளியை வீசிட
எழுந்து வா
உன் உணர்வுகள் மீண்டும்
இங்கு திரும்பிட வேண்டும்
உயிர் காதலி இவள் பாடிடும்
குரல் கேட்குதா
இதயமேஓஇதயமே
எழுந்து வா ஏன் மயக்கமே
எதையும் தாங்கிடும் இதயம் அல்லவா
எழுந்து வா
உதய வெள்ளி போல் ஒளியை வீசிட
எழுந்து வா
உன் உணர்வுகள் மீண்டும்
இங்கு திரும்பிட வேண்டும்
உயிர் காதலி இவள் பாடிடும்
குரல் கேட்குதா
இதயமேஓஇதயமே
எழுந்து வா ஏன் மயக்கமே
மணிக்கணக்காக
மழை அடித்தாலும்
மலை என்ன சரிந்திடுமா
சுழல் சுழலாக புயல் அடித்தாலும்
நிலவென்ன அணைந்திடுமா
கடும் வெயில் கொடை
கொதித்திருந்தாலும்
கடல் தண்ணி குறைந்திடுமா
அடுக்கடுக்காக துயர் விளைந்தாலும்
ஆண் மனம் தளர்ந்திடுமா
இமைகளை திறந்திங்கு பார்த்திடு
இதயத்தில் வலிமையை சேர்த்திடு
எவன் வந்து உன்னை இங்கு வீழ்த்துவான்
எதிரியும் தலை தனை தாழ்த்துவான்
சிறையில் இருக்குமா காற்று
சிலிர்த்து எழுந்து நீ காட்டு
சுட்ட போதும் தங்கம் வேகுமா
வெத்து சாம்பல் என்று ஆகுமா
எழுந்து வா
இதயமேஓஇதயமே
உன் உணர்வுகள் மீண்டும்
இங்கு திரும்பிட வேண்டும்
உயிர் காதலி இவள் பாடிடும்
குரல் கேட்குதாஆஅ
இதயமேஓஇதயமே
தனி மரமாக
தரையினில் சாய
நான் உன்னை விடமாட்டேன்
உடல் நலம் ஆகும்
வரையினில் நாளும்
உணவினை தொடமாட்டேன்
விதித்தவன் நீயும்
வரி புலி போல
மறுபடி எழ வேண்டும்
எழுந்ததை பார்த்து ஆனந்தத்தோடு
நான் கொஞ்சம் அழ வேண்டும்
நினைத்ததை முடிப்பது
பெண் மனம்
நம்பிக்கை நிறைந்தது என் மனம்
முயற்சிகள் பலன் தரும் நாள் வரும்
மன சுமை விரைவினில் தீர்ந்திடும்
புதிய மடல் விடும் பூவா
புதிய உணர்வுடன் நீ வா
வெற்றி மாலை உந்தன் தோளிலே
வந்து சேரும் இந்த நாளிலே
எழுந்து வா
இதயமேஇதயமே
எழுந்து வா ஏன் மயக்கமே
எதையும் தாங்கிடும் இதயம் அல்லவா
எழுந்து வா
உதய வெள்ளி போல் ஒளியை வீசிட
எழுந்து வா
உன் உணர்வுகள் மீண்டும்
இங்கு திரும்பிட வேண்டும்
உயிர் காதலி இவள் பாடிடும்
குரல் கேட்குதா
இதயமேஓஇதயமே
எழுந்து வா ஏன் மயக்கமே