Ithayathai Kanavillai |
---|
இசை அமைப்பாளர் : எஸ்ஏராஜ்குமார்
வானில் இருந்து வானவில் ஒன்று
மண்ணில் இரங்கி வந்ததுவோ
மங்கை அவளது மந்திர கண்கள்
சந்திர சூரியன் ஆனதுவோ
கண்டேன் அழகிய கொலுசு கொலுசு
திருகாணி ஆனது மனசு மனசு
இன்னாள் அனுபவம் புதுசு புதுசு
அவள் பாதகொலுசொலி கேட்கும் போது
இதயத்தை காணவில்லை
அது தொலைந்தும் நான் தேடவில்லை
சிட்டுகுருவியின் சிறகு வாங்கி
அட பறக்கணும் போல இருக்கு
வெட்டுகிளியின் கால்கள் வாங்கி
அட குதிக்கணும் போல இருக்கு
கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே
இது உண்மை தானே
இதயத்தை காணவில்லை
அது தொலைந்தும் நான் தேடவில்லை
பௌர்ணமி நிலவை
மிக அருகினில் பார்த்தேன்
பரவச கடலில்
நான் படகாய் ஆனேன்
தேவதை கண்ணில்
இரு தூண்டிலை பார்த்தேன்
மாட்டிய மீனாய்
ஆனேன் ஆனேன்
பல்லவன் உளிகள் கூடி
செதுக்கிய சிலை தானா
பிரம்மன் சிலையை பார்த்து
ஜீவனை கொடுத்தானா
தீண்டாமல் திருடசொன்னானா
என்னை இன்று
இதயத்தை காணவில்லை
அது தொலைந்தும் நான் தேடவில்லை
ஒரு மைல் தூரம்
இது காதல் கடிதம்
அவளுக்கு எழுதி
நான் அஞ்சல் செய்தேன்
இனி அவள் முத்தம்
அது சேமித்து வைக்க
என்னுடல் முழுதும்
நான் உதடுகள் கேட்டேன்
சொர்க்கத்தில் என்னை பூட்டி
சாவியை தொலைத்தாளே
பூக்களின் தொட்டிலில் போட்டு
அவள் லாலிகள் படித்தாளே
பாறை மீது பூவை பூத்தாளே
என்னில் இன்று
இதயத்தை காணவில்லை
அது தொலைந்தும் நான் தேடவில்லை
சிட்டுகுருவியின் சிறகு வாங்கி
அட பறக்கணும் போல இருக்கு
வெட்டுகிளியின் கால்கள் வாங்கி
அட குதிக்கணும் போல இருக்கு
கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே
இது உண்மை தானே
இதயத்தை காணவில்லை
அது தொலைந்தும் நான் தேடவில்லை