Ival Yaaro Vaanvittu |
---|
இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்னப் பேரோ
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ
நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல
என்றென்றும் வாழும் காதல்
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்
அடடா அதில் நான் மறந்தேன் என்னை
இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
இவள் யாரோ
காதல் வாழ்வு கானல் என்று
நேற்றுப் பேசினேன்
காதலே தெய்வீகம் என்று
இன்று போற்றினேன்
காலை மாலை உன்னை எண்ணி
உள்ளம் வாடினேன்
ஆசைகள் கை கூடும்
இந்த நாளை வாழ்த்தினேன்
கண்ணே பசும் பொன்னே
ஹ்ம்ம் ம்ம்
வந்தேன் உந்தன் பின்னே
கண்ணா மணிவண்ணா
உன் பேர் தினம் சொன்னேன்
உனைக் கண்டேன் கனிந்தேன்
இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்னப் பேரோ
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ
நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல
என்றென்றும் வாழும் காதல்
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல
நெஞ்சுக்குள் ஊரும் பாடல்
அடடா அதில் நான் மறந்தேன் என்னை
இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
தேவன் உந்தன் தேரும் எந்தன்
வாசல் வந்ததே
தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே
நேரம் காலம் கூடும் போது
நேசம் வென்றதே
நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே
இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம்
பொங்கும் இனி பொங்கும் செந்தேன் இதழ் எங்கும்
அதில் என்னை இழந்தேன்
இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்னப் பேரோ
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ
நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல
என்றென்றும் வாழும் காதல்
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்
அடடா அதில் நான் மறந்தேன் என்னை
இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
இவள் யாரோ