Jananam Oru Vazhi Maranam

Jananam Oru Vazhi Maranam Song Lyrics In English


ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி
ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி

இவளுக்கொரு தாய் இருந்தாள் அந்நாளிலே
பின் இவளும் ஒரு தாய் ஆனாள் வந்த நாளிலே
அந்த தாய்க்கு கொள்ளியிட ஆண் மகன் இல்லை
இன்று இந்த தாய்க்கு கொள்ளி வைக்க இவள் மகன் இல்லை

ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி

ஒரு மகனைப் பிரிந்தவர்க்கு மருமகன் வந்தான்
அந்த மருமகனே திருமகனாய் மந்திரம் சொன்னான்
இறுதிவரை வருபவரே உறவினர் என்றார்
அந்த இறைவனுக்கு அடுத்தவனாய் மருமகன் நின்றான்

ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி


கட்டிலுக்கு சொந்தக்காரன் கட்டில் போட்டான்
தொட்டிலுக்கு சொந்தக்காரன் மட்டம் போட்டான்
கட்டை இதன் சொந்தக்காரன் கடிதம் போட்டான்
கட்டை இதன் சொந்தக்காரன் கடிதம் போட்டான்
கடைசிகால சொந்தக்காரன் சட்டி எடுத்தான்

பத்துமாதம் சுமந்து அன்னை தோளில் எடுத்தாள்
அவன் பத்து நிமிஷம் நேரம் மட்டும் பயணம் கொடுத்தான்
பத்துமாதம் சுமந்து அன்னை தோளில் எடுத்தாள்
அவன் பத்து நிமிஷம் நேரம் மட்டும் பயணம் கொடுத்தான்
எத்தனையோ ஆசையுடன் மகனை வளர்த்தாள் இன்று
எங்கிருந்தோ சொந்தம் வந்து தோள்கள் கொடுத்தார்

அள்ளியிட்டாள் உறவுக்கென்று அள்ளியும் இட்டார்
அரிசியிட்டாள் உறவுக்கென்று அரிசியும் இட்டாள்
கொள்ளியிட்டாள் அடுப்புக்கென்று கொள்ளியும் இட்டாள்
கோடியிலே ஒன்று என்று வீடு நடந்தாள்

ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி