Jenmangal Thorum |
---|
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே
கஸ்தூரி திலகம் கருணா கடாக்ஷம்
அரவிந்த கள நேத்திரமே
கௌசல்யா புத்திரம் ஸ்ரீராமச்சந்திரம்
வைதேகி சௌபாக்யமே
ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும்
பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம்
மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம்
கோதண்டபாணி கையோடு தஞ்சம்
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே
சௌந்தர்ய நாரி ஜனகன் குமாரி
திருமேனி தேவாலயம்
ஸ்ரீராமன் கொஞ்சும் அங்கங்கள் எங்கும்
சந்தோஷ ரோமாஞ்சனம்
வில்லாலன் மார்பில் விளையாடும் மானே
பல்லாண்டு பாடும் பாமாலை நானே
வில்லாலன் மார்பில் விளையாடும் மானே
பல்லாண்டு பாடும் பாமாலை நானே
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே
ராஜாதிராஜன் தேவாதி தேவன்
ரகுவம்ச சுகுமாரனே
ஆதாரம் நீயே அவதாரம் நீயே
சாஷ்டாங்க நமஸ்காரமே
கவியாளும் யாரும் கொண்டாடும் நாதன்
புவியாள வந்தான் பூமாலை தந்தான்
சீதாவின் தேகம் மிளிர்கின்ற வண்ணம்
அருள்மாரி பெய்தான் அபிஷேகம் செய்தான்
ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும்
பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம்
மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம்
கோதண்டபாணி கையோடு தஞ்சம்
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே