Kaadhal Nilave Kanmani Radha

Kaadhal Nilave Kanmani Radha Song Lyrics In English


காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு

காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு

கனவிலும் நானே
மறுபடி வருவேன்
கவலையில்லாமல் தூங்கு

காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு

ஆஹாஆஹா
ஆஹாஆஹாஆஹா

கோடி செல்வரென்றாலும்
தேடும் கள்வரென்றாலும்
யாரும் ஆடிப்பாடி ஓய்ந்துவிடும்
காரிருள் வேளை

உன் கன்னத்தின் மீதே
நானும் கன்னம் வைப்பதால்
இவன் கள்வனென்று என்னை
நீயும் எண்ணி விடாதே

காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு

நாளும் தூக்கமில்லாமல்
ஓடும் நதியினைப் போலே
உன்னை தூக்கமின்றி காத்திருப்பேன்
ஆசையினாலே


நாளும் தூக்கமில்லாமல்
ஓடும் நதியினைப் போலே
உன்னை தூக்கமின்றி காத்திருப்பேன்
ஆசையினாலே

காதல் பாட்டு பாடுவேன்
தாலாட்டு பாடுவேன்
உன் பார்வை சொல்லும் ஜாடையிலே
உலகை வெல்லுவேன்

காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு

ஆஹாஆஹா
ஆஹாஆஹாஆஹா

யாரும் தேற்ற வந்தாலும்
என்னை மாற்ற வந்தாலும்
உன்னை சேர்ந்துவிட்ட நெஞ்சமொன்றும்
மாறிவிடாது

அது கடமையென்றாலும்
அந்த கடவுள் சொன்னாலும்
ஒன்று கலந்துவிட்ட நமது
சொந்தம் பிரிந்துவிடாது

காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு