Kaadhal Vandhaal

Kaadhal Vandhaal Song Lyrics In English




காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே
உயிரும் வழிய கரையில்
கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே
மீனாக மனம் வெட்ட
வெளியிலே வாடுதடி
கண்ணீர் கலந்து கண்ணீர்
கலந்து கடல் நீர் மட்டம்
கூடுதடி

காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால்
வருகிறேன்

உயிரை தவிர
சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன்
சொந்தம் ஆனதே காதல்
வந்த பின்பு



சாவை அழைத்து
கடிதம் போட்டேன் காதலிக்கும்
முன்பு ஒரு சாவை புதைக்க சக்தி
கேட்கிறேன் காதல் வந்த பின்பு
உன்னால் என் கடல் அலை
உறங்கவே இல்லை உன்னால்
என் நிலவுக்கு உடல் நலம் இல்லை


கடல் துயில்
கொள்வதும் நிலா
குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என்
உயிரை கொல்லுதடி
கொல்லுதடி

காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால்
வருகிறேன் என் கண்ணில்



பிறந்த மண்ணை
அள்ளி தின்றேன் உன்னை
காணும் முன்பு நீ நடந்த
மண்ணை அள்ளி தின்றேன்
உன்னை கண்ட பின்பு அன்னை
தந்தை கண்டதில்லை நான் கண்
திறந்த பின்பு என் அத்தனை உறவும்
மொத்தம் கண்டேன் உன்னை
கண்ட பின்பு

பெண்ணே என்
பயணமோ தொடங்கவே
இல்லை அதற்குள் அது
முடிவதா விளங்கவே
இல்லை நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும் வளர்
பிறையாவதும் உன் சொல்லில்
உள்ளதடி உன் இறுக்கம் தான்
என் உயிரை கொல்லுதடி
கொல்லுதடி

காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு