Kaadhalikka Neram Illaiya |
---|
காலை பூக்கள் பூத்திருக்கு
சாலை ஓரம் காத்திருக்கு
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா
கிளாக்கின் முள்ளும் ஓட ஓட
பித்த நரைகள் கூட கூட
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா
ஒதட்டின் ஓரம் இன்னும் சற்று
தயங்கி நிற்கும் கேள்வி ஒன்று
மாய்ந்து போகும் தகவல் உனக்கு
கிடைக்கவில்லையா
உலக வெப்பம் கூடி கூடி
பனி கரைந்து வெள்ளமாகி
மனித இனமே அழியும் என்று
தோன்றவில்லையா
ஆயுள் ரேகை தேய தேய
ஆசை நெஞ்சில் காய காய
சூடு சொரணை இன்றி நீயும் இருப்பதேன்
நாலு பூக்கள் வாடி போகும்
நூறு மொட்டு மலர்கள் ஆகும்
இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா
உலகம் அழிய டைம் இருக்கு
அதை நினைச்சு பயம் எதுக்கு
இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா
வயசு சொல்லி மெரட்டி மெரட்டி
மனசுகுள்ள கொழப்பி கொழப்பி
இந்த நொடியின் இனிமை நீ காணவில்லையா
என்னை இப்போ டென்ஷன் பண்ணி
சம்பளம் விட்டு பென்ஷன் என்னும்
காண்வெர்சேசன் போரிங் என்று தோணவில்லையா
கவலை எல்லாம் சுட்டு போடு
கணக்கை மூட்டை கட்டி போடு
காதல் கீதல் இப்போ எதுக்கு செல்லமே
நதிநிலாநிலம்
நிலைக்காது என்று
உன் பதட்டம் வெறும் ஓர்
விதண்டாவாதம்
ஆமாம் உன் பேச்சில்
இருக்கு ஏதோ நியாயம்
ஆனால் காதலில்
விழுந்தால் படுமா காயம்
அம்மாதாயே
ஆர் குயூ மென்ட் செய்ய நேரம் இல்லை
காலை பூக்கள் பூத்திருக்கு
சாலை ஓரம் காத்திருக்கு
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா
நாலு பூக்கள் வாடி போகும்
நூறு மொட்டு மலர்கள் ஆகும்
இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா
உந்தன் ஒதட்டின் ஓரம் சற்று முன்பு
தயங்கி நின்ற கேள்வி ஒன்று
அந்த கேள்வி எச்சிலோடு
கரைந்து விட்டதே
இந்த நிமிடம் கரையும் முன்னே
இந்த சிரிப்பு மறையும் முன்னே
ஸ்ட்ராங்காய் ரெண்டு டீ குடிக்க
நேரம் இல்லையா
இருவர் : கவலை எல்லாம் சுட்டு போடு
கணக்கை மூட்டை கட்டி போடு
காதல் கீதல் இப்போ எதுக்கு செல்லமே