Kaadhalile Patru Vaithaal |
---|
காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
கண்மணியே வரவு வைப்பாள்
உன்னையடா உன்னை
எழுதி வைத்தார் பிரிந்து விட்டார்
என்னையடா என்னை
ஏற்றுக் கொண்டாள் ஈன்றேடுத்தாள்
பொன்னையடா பொன்னை
காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
தேவகி வயிற்றில் காரியக் கண்ணன்
சிறையில் பிறந்தானே
அவள் அன்பில் துணைவன் வாசுதேவன்
அருகில் இருந்தானே
தேவகி வயிற்றில் காரியக் கண்ணன்
சிறையில் பிறந்தானே
அவள் அன்பில் துணைவன் வாசுதேவன்
அருகில் இருந்தானே
என் அரும் மகனே நீ வரும் வேளை
தந்தை அருகில்லையே
உன் இரு விழி அழகை நால் விழியாலே
காணவும் வழி இல்லையே
காணவும் வழி இல்லையே
காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம்
நீயே வெண்ணிலவு
இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம்
நீயே பூஞ்சிறகு
இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம்
நீயே வெண்ணிலவு
இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம்
நீயே பூஞ்சிறகு
உன் திருமுகம் ஒன்றே மனையகம் வாழ
செய்யும் திருவிளக்கு
இன்று தெய்வமும் நீயும் துணை இல்லாவிடில்
யாரும் இல்லை எனக்கு யாரும் இல்லை எனக்கு
காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
கண்மணியே வரவு வைப்பாள்
உன்னையடா உன்னை
காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆரோ