Kaadhalile Patru Vaithaal

Kaadhalile Patru Vaithaal Song Lyrics In English


காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
கண்மணியே வரவு வைப்பாள்
உன்னையடா உன்னை
எழுதி வைத்தார் பிரிந்து விட்டார்
என்னையடா என்னை
ஏற்றுக் கொண்டாள் ஈன்றேடுத்தாள்
பொன்னையடா பொன்னை

காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை

தேவகி வயிற்றில் காரியக் கண்ணன்
சிறையில் பிறந்தானே
அவள் அன்பில் துணைவன் வாசுதேவன்
அருகில் இருந்தானே

தேவகி வயிற்றில் காரியக் கண்ணன்
சிறையில் பிறந்தானே
அவள் அன்பில் துணைவன் வாசுதேவன்
அருகில் இருந்தானே
என் அரும் மகனே நீ வரும் வேளை
தந்தை அருகில்லையே
உன் இரு விழி அழகை நால் விழியாலே
காணவும் வழி இல்லையே
காணவும் வழி இல்லையே

காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை


இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம்
நீயே வெண்ணிலவு
இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம்
நீயே பூஞ்சிறகு

இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம்
நீயே வெண்ணிலவு
இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம்
நீயே பூஞ்சிறகு
உன் திருமுகம் ஒன்றே மனையகம் வாழ
செய்யும் திருவிளக்கு
இன்று தெய்வமும் நீயும் துணை இல்லாவிடில்
யாரும் இல்லை எனக்கு யாரும் இல்லை எனக்கு

காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
கண்மணியே வரவு வைப்பாள்
உன்னையடா உன்னை

காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆரோ