Kaadhil Kettadhu |
---|
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம் நானாவேன்
போதை ஏறும் புது ராகம் நீயானால்
அதன் பாவம் நானாவேன்
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
நீல விழி ஏட்டில் உன்னை வரைந்து
நெஞ்சில் வைத்துப் பார்த்தேன் என்னை மறந்து
மானும் மீனும் வாழும் கண்ணில்
என்னை வைத்தாயோ
பாசம் என்னும் நூலைக் கொண்டு
நெஞ்சை தைத்தாயோ
நான் இனி மேல் உன்னோடுதான்
நீ நடந்தால் பின்னோடு நான்
நான் இனி மேல் உன்னோடுதான்
நீ நடந்தால் பின்னோடு நான்
எந்நாளும் சங்கீதம் எப்போதும் சந்தோஷம்
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம் நானாவேன்
போதை ஏறும் புது ராகம் நீயானால்
அதன் பாவம் நானாவேன்
கூட்டில் ஒரு ஜோடி சிட்டுக் குருவி
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் தொட்டுத் தழுவி
காணக் காண நானும் நீயும்
பக்கம் நெருங்க
கட்டிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும்
முத்தம் வழங்க
போதும் என அச்சம் வரும்
போதைகளும் உச்சம் வரும்
போதும் என அச்சம் வரும்
போதைகளும் உச்சம் வரும்
அம்மாடி அப்பாடி
உன் ஆசை பொல்லாது
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம் நானாவேன்
போதை ஏறும் புது ராகம் நீயானால்
அதன் பாவம் நானாவேன்
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு