Kaadhil Kettadhu

Kaadhil Kettadhu Song Lyrics In English


காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு

காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம் நானாவேன்

போதை ஏறும் புது ராகம் நீயானால்
அதன் பாவம் நானாவேன்

காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு

நீல விழி ஏட்டில் உன்னை வரைந்து
நெஞ்சில் வைத்துப் பார்த்தேன் என்னை மறந்து

மானும் மீனும் வாழும் கண்ணில்
என்னை வைத்தாயோ

பாசம் என்னும் நூலைக் கொண்டு
நெஞ்சை தைத்தாயோ

நான் இனி மேல் உன்னோடுதான்
நீ நடந்தால் பின்னோடு நான்
நான் இனி மேல் உன்னோடுதான்
நீ நடந்தால் பின்னோடு நான்
எந்நாளும் சங்கீதம் எப்போதும் சந்தோஷம்

காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு

காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம் நானாவேன்

போதை ஏறும் புது ராகம் நீயானால்
அதன் பாவம் நானாவேன்


கூட்டில் ஒரு ஜோடி சிட்டுக் குருவி
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் தொட்டுத் தழுவி

காணக் காண நானும் நீயும்
பக்கம் நெருங்க

கட்டிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும்
முத்தம் வழங்க

போதும் என அச்சம் வரும்
போதைகளும் உச்சம் வரும்
போதும் என அச்சம் வரும்
போதைகளும் உச்சம் வரும்

அம்மாடி அப்பாடி
உன் ஆசை பொல்லாது

காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு

காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம் நானாவேன்

போதை ஏறும் புது ராகம் நீயானால்
அதன் பாவம் நானாவேன்

காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு