Kaagangal Parandhaalum |
---|
காகங்கள் பறந்தாலும்
மேகங்கள் மிதந்தாலும்
ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு
மாறாது எந்நாளும் ஓஓஓஹ்
உண்மைக்கு யாரும் பூசட்டும் சாயம்
ஒன்றுக்கு நூறாய் பேசட்டும் ஊரும்
காகங்கள் பறந்தாலும்
மேகங்கள் மிதந்தாலும்
ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு
மாறாது எந்நாளும் ஓஓஓஹ்
விந்தை இதுதான் தந்தைக்கு எதிரே
வழக்காட மகள் துணிந்தாள்
வைரக்கல் இன்று தப்புக்கள் செய்து
உப்புக்கல் ஆனது என்றாள்
யார் மீது குற்றங்கள் சொல்ல
இது விதியன்றி வேறொன்றும் அல்ல
தர்மங்கள் இங்கே மர்மங்களானால்
தெய்வத்தை கூட தண்டிக்க நேரும்
காகங்கள் பறந்தாலும்
மேகங்கள் மிதந்தாலும்
ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு
மாறாது எந்நாளும் ஓஓஓஹ்
சீதை நெஞ்சில் ஸ்ரீராமன் மீது
சந்தேகம் கிடையாது
சாயாது இமயம் புயல் வீசும் சமயம்
என்றெண்ணி வாழ்ந்திடும் மாது
ஆனாலும் கண்ணீரில் ஆடும் உள்ளம்
அலை பாய்ந்து நிலையின்றி ஓடும் ஓஓ
நட்புக்கு கூட கற்பிங்கு உண்டு
நிறம் மாறி போச்சு அதுதானே இன்று
சட்டம் சாட்சி சந்தர்ப்பம் பார்த்து
மன்றங்கள் தீர்ப்பெழுதும்
வாய் வார்த்தை எல்லாம்
கைக்கோர்த்து நின்றால்
உண்மைகள் ஊமைகள் ஆகும்
நேசங்கள் பாசங்கள் சேரும்
நாலு நெஞ்சத்தில் துன்பத்தின் பாரம்
நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் போலே
நூல் மட்டும் தேவன் கைகளின் மேலே
காகங்கள் பறந்தாலும் மேகங்கள் மிதந்தாலும்
ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு
அதுபோல விளங்கட்டுமே இங்கே
நியாயங்கள் ஜெயிக்கட்டுமே
இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே
இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே
இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே