Kaalaakaalam Kalyanam |
---|
காலாகாலம் கல்யாணம் ஆனா காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி நாளை ஈனும் சின்னப் புள்ளை
லாலி சுப லாலி இனி ஆடும் காய்கள் கோடி சம்மந்தி முறை பேச வாடியம்மா சம்மந்தி முறை பேச வாடியம்மா
காலாகாலம் கல்யாணம் ஆனா காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி நாளை ஈனும் சின்னப் புள்ளை
பிள்ளையென்று சொல்வதிந்த தென்னை பிள்ளை பெற்றோர்கள்தான்டி இதன் அன்னை தாலிக்கட்டி வைத்து விடு முன்னே அதன் தலை மீது தள்ளாடும் பின்னே இளநீரு வரும் பாரு என்னைப்போல உன்னைப்போல
காலாகாலம் கல்யாணம் ஆனா காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி நாளை ஈனும் சின்னப் புள்ளை
ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ ஓஹ்ஹோ ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ ஓஹ்ஹோ
சேலைக் கட்டும் சின்னப் பிள்ளைப் போலே அது சின்ன நடை போடுது பார் மேலே மாலையிட்டு மணம் முடிச்சதாலே அது மாப்பிள்ளையை தேடுது கண்ணாலே இலை மூடும் அவள் மேனி என்னைப்போல உன்னைப்போல
காலாகாலம் கல்யாணம் ஆனா காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி நாளை ஈனும் சின்னப் புள்ளை
கால் வழியே ஊற்றி விட்ட நீரு அத தலை வழியே திருப்பி தரும் பாரு பானைப் போல மூடி வச்சதாரு அத படச்சவன பார்த்து நன்றி கூறு வயசு வந்த நேரம் பார்த்து என்னைப்போல உன்னைப்போல
காலாகாலம் கல்யாணம் ஆனா காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி நாளை ஈனும் சின்னப் புள்ளை
லாலி சுப லாலி இனி ஆடும் காய்கள் கோடி சம்மந்தி முறை பேச வாடியம்மா சம்மந்தி முறை பேச வாடியம்மா