Kaalam Ilavenil Kaalam |
---|
ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம்
காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சைப் பாராட்டுது
கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை
கொடியில் குலுங்கும் பூப் போல மணக்கும்
காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது
ஒரு நூலில் மாலை போலே
உருவான பூக்களே
வரும் காலம் வாழ்வில் என்றும்
வளமான நாட்களே
நாயகன் நாயகி அன்றில்கள் போல்
வாழ்ந்திடும் வீடு தான் ஆலயம் போல்
தேவன் தேவி பாதிப் பாதி
ஜீவன் போலே நீங்காமல் இருக்க
ம் ம் ம் ம் ம் ம் ம்
காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சைப் பாராட்டுது
இவள் தாயின் தோளில் ஆடும்
அழகான பைங்கிளி
மணமாலை சூடும் நாளை
எதிர் பார்க்கும் பூங்கொடி
தாய் வழி நாணங்கள் வாங்கியே தான்
தாவிடும் பெண் இவள் பூவிழி மான்
தாயும் சேயும் தலைவன் கூட
வாழும் குடும்பம் வாடாமல் இருக்க
காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சைப் பாராட்டுது
கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை
கொடியில் குலுங்கும் பூப் போல மணக்கும்
ம் ம் ம் ம் ம் ம் ம்
காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது