Kaalam Mazhai

Kaalam Mazhai Song Lyrics In English


காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சம் போராடுதோ
கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை
கலைந்து போக கண்ணீரில் மிதக்கும்

காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ

ஒரு நூலில் மாலை போலே
உருவான பூக்களே
இதழ் வாடி வாடி இன்று சருகாகிப் போனதே
நாயகன் நாயகி அன்றில்கள் போல்
வாழ்ந்ததோர் வாழ்க்கை தான்
கானல் நீர் போல்
தேவன் தேவி காதல் மேவி
வாழ்ந்த நாட்கள் கனவாகிப் போக

காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சம் போராடுதோ


இவள் தாயின் தோளில் சாயும்
அழகான பைங்கிளி
மண மாலை சூடும் நாளை
எதிர் பார்த்த பூங்கொடி
ஆசையின் ஊஞ்சலில் ஆடிய மான்
இந்த நாள் இங்கு தான் வாடினாள் ஏன்
தாயும் சேயும் ஊமை போலே
வார்த்தை ஏதும் பேசாமல் தவிக்க

காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சம் போராடுதோ
கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை
கலைந்து போக கண்ணீரில் மிதக்கும்

காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ