Kaalamennum Nadhiyinile

Kaalamennum Nadhiyinile Song Lyrics In English


காலம் என்னும்
நதியினிலே காதல் என்னும்
படகு விட்டேன் மாலை
வரை ஓட்டி வந்தேன் மறு
கரைக்கு கூட்டி வந்தேன்

காலம் என்னும்
நதியினிலே காதல் என்னும்
படகு விட்டேன் மாலை
வரை ஓட்டி வந்தேன் மறு
கரைக்கு கூட்டி வந்தேன்

காலம்
என்னும் நதியினிலே

ஓடம் என்று
நினைத்திருந்தேன் ஓடும்
என்று நினைத்ததில்லை
ஓடம் என்று நினைத்திருந்தேன்
ஓடும் என்று நினைத்ததில்லை

நாடும் என்றே
நாடி நின்றேன் நாடகம்
என்று எண்ணவில்லை
நாடும் என்றே நாடி
நின்றேன் நாடகம் என்று
எண்ணவில்லை

காலம்
என்னும் நதியினிலே


இதயம் என்ற
கூட்டினிலே இருவருக்கு
இடமில்லை இதயம் என்ற
கூட்டினிலே இருவருக்கு
இடமில்லை

ஒருவனுக்கே
ஒருத்தி என்றே உலகை
விட்டே ஓடுகின்றேன்
ஒருவனுக்கே ஒருத்தி
என்றே உலகை விட்டே
ஓடுகின்றேன்

காலம் என்னும்
நதியினிலே காதல் என்னும்
படகு விட்டேன் மாலை
வரை ஓட்டி வந்தேன் மறு
கரைக்கு கூட்டி வந்தேன்

காலம்
என்னும் நதியினிலே

தேவனவன்
திருவடிகள் வருகவே
சிந்தனைக்கு அமைதி
என்றும் தருகவே கூடும்
இளங்காதலர்கள் வாழ்கவே
காதல் கொண்டவர்கள்
தோல்வியின்றி வாழ்கவே
வாழ்கவே வாழ்கவே