Kaalamenum Kaattaaru

Kaalamenum Kaattaaru Song Lyrics In English


காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா
ஆஅஆஅஆஆஹாஆஆ
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா

கோலவுயிர்க் குலமெல்லாம்
குலவுகின்ற வாழ்வெல்லாம்
கோலவுயிர்க் குலமெல்லாம்
குலவுகின்ற வாழ்வெல்லாம்
காலமெனும் கன்னியவள்
கண்ணிமையின் லீலையடா

காலைப் பொன் சூரியனும்
கார்முகிலின் சந்திரனும்
காலைப் பொன் சூரியனும்
கார்முகிலின் சந்திரனும்
காலமெனும் வண்டியிலே
கடையாணியாகுமடா

கோணல் மனப்பாவிகளின்
கொடுமதியின் வினையெல்லாம்
கோணல் மனப்பாவிகளின்
கொடுமதியின் வினையெல்லாம்
கண்ணீரால் போக்கிவிடும்
கருணை மிகும் காலமடா
ஆஅஆஅஆஆஹாஆஆ
கண்ணீரால் போக்கிவிடும்
கருணை மிகும் காலமடா
ஆஅஆஅஆஆ


நல்லோர்க்கு சோதனையும்
தீயோர்க்கு வேதனையும்
நல்லோர்க்கு சோதனையும்
தீயோர்க்கு வேதனையும்
எல்லோர்க்கும் நீதி தரும்
இணையில்லாக் காலமடா

காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா
ஆஅஆஅஆஆஹாஆஆ