Kaalamenum Kaattaaru |
---|
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா
ஆஅஆஅஆஆஹாஆஆ
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா
கோலவுயிர்க் குலமெல்லாம்
குலவுகின்ற வாழ்வெல்லாம்
கோலவுயிர்க் குலமெல்லாம்
குலவுகின்ற வாழ்வெல்லாம்
காலமெனும் கன்னியவள்
கண்ணிமையின் லீலையடா
காலைப் பொன் சூரியனும்
கார்முகிலின் சந்திரனும்
காலைப் பொன் சூரியனும்
கார்முகிலின் சந்திரனும்
காலமெனும் வண்டியிலே
கடையாணியாகுமடா
கோணல் மனப்பாவிகளின்
கொடுமதியின் வினையெல்லாம்
கோணல் மனப்பாவிகளின்
கொடுமதியின் வினையெல்லாம்
கண்ணீரால் போக்கிவிடும்
கருணை மிகும் காலமடா
ஆஅஆஅஆஆஹாஆஆ
கண்ணீரால் போக்கிவிடும்
கருணை மிகும் காலமடா
ஆஅஆஅஆஆ
நல்லோர்க்கு சோதனையும்
தீயோர்க்கு வேதனையும்
நல்லோர்க்கு சோதனையும்
தீயோர்க்கு வேதனையும்
எல்லோர்க்கும் நீதி தரும்
இணையில்லாக் காலமடா
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா
ஆஅஆஅஆஆஹாஆஆ