Kaalangal Thorum |
---|
ஆஅ ஆஹா ஆஹா ஆஹ்ஹா
ஓ ஓஓஹோ ஓஹோ
காலங்கள் தோறும்
திருடர்கள் இருந்தார்
அறிவாயா தோழி
அதில் காதல் திருடர்கள்
பாதி இருந்தார்
அறிவாயா தோழி
காலங்கள் தோறும்
திருடர்கள் இருந்தார்
அறிவாயா தோழி
அதில் காதல் திருடர்கள்
பாதி இருந்தார்
அறிவாயா தோழி
வாசல் திறந்தால்
திருடன் வருவான்
மனதைத் திறந்தால்
காதலன் வருவான்
வாசல் திறந்தால்
திருடன் வருவான்
மனதைத் திறந்தால்
காதலன் வருவான்
காதல் திருடர்கள்
பயப்பட மாட்டார்
அறிவாயா தோழி
காதல் திருடர்கள்
பயப்பட மாட்டார்
அறிவாயா தோழி அந்தக்
கள்வருக்கென்றொரு
சட்டமும் இல்லை
அறிவாயா தோழி
காலங்கள் தோறும்
திருடர்கள் இருந்தார்
அறிவாயா தோழி
அதில் காதல் திருடர்கள்
பாதி இருந்தார்
அறிவாயா தோழி
திருடிய பொருளே
திருடனை விரும்பும்
நேசத்தில் ஒரு பாசத்தை வழங்கும்
திருடிய பொருளே
திருடனை விரும்பும்
நேசத்தில் ஒரு பாசத்தை வழங்கும்
ஒருவரை ஒருவர் திருடிக் கொண்டால்
அதில் முடிவேது தோழி
ஒருவரை ஒருவர் திருடிக் கொண்டால்
அதில் முடிவேது தோழி
அந்த உத்தம திருடர்கள் இல்லையென்றால்
இந்த உலகேது தோழி
காலங்கள் தோறும்
திருடர்கள் இருந்தார்
அறிவாயா தோழி
அதில் காதல் திருடர்கள்
பாதி இருந்தார்
அறிவாயா தோழி
ஆஅ ஆஹா ஆஹா ஆஹ்ஹா
ஓ ஓஓஹோ ஓஹோ