Kaalangal Unakkaga |
---|
பாதையிலே கால் நடந்தால்
ஊர் போய்ச் சேரும்
போதையிலே நீ நடந்தால் ஊரே மாறும்
காலங்கள் உனக்காக
காத்திருக்காது
காலங்கள் உனக்காக
காத்திருக்காது
காலடிச் சுவடுகள் கூட வராது
காலடிச் சுவடுகள் கூட வராது
காலங்கள் உனக்காக
காத்திருக்காது
நல்லவன் என்றே ஊரார் சொல்லும்
நல்லவன் என்றே ஊரார் சொல்லும்
புகழும் போதை அல்லவா
நடத்தையைக் கொண்டு மதிப்பதைக் கண்டு
நடத்தையைக் கொண்டு மதிப்பதைக் கண்டு
வாழ்வது வாழ்க்கையல்லவாஆ
இன்னும் நான் சொல்லவா
காலங்கள் உனக்காக
காத்திருக்காது
பழகுவதெல்லாம் பழகிய பின்னே
அழுபவன் கோழையல்லவாஆ
பழகுவதெல்லாம் பழகிய பின்னே
அழுபவன் கோழையல்லவாஆ
நினைப்பதும் நீயே நடப்பதும் நீயே
நினைப்பதும் நீயே நடப்பதும் நீயே
நெஞ்சே சாட்சியல்லவாஆ
இன்னும் நான் சொல்லவா
காலங்கள் உனக்காக
காத்திருக்காது
ஆடைகள் வேறு ஜாடைகள் வேறு
ஆடைகள் வேறு ஜாடைகள் வேறு
பெண்மை ஒன்றல்லவாஆ
கிண்ணங்கள் வேறு வண்ணங்கள் வேறு
கிண்ணங்கள் வேறு வண்ணங்கள் வேறு
போதை ஒன்றல்லவாஆ
இன்னும் நான் சொல்லவா
காலங்கள் உனக்காக
காத்திருக்காது
காலடிச் சுவடுகள் கூட வராது
காலங்கள் உனக்காக
காத்திருக்காது