Kaanakathai Thedi Indru |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி
மானிடத்தை தேடி இன்று போகிறாள்
தன் மணவாளன் கட்டளையால் ஜானகி
கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி
தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை
அவள் தேர் செல்லும் பாதையில் தெய்வமும் இல்லை
தெய்வமும் இல்லை
பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை
தன் பாவமல்ல என்று சொல்ல வார்த்தையும் இல்லை
கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி
ஊமைக் கண்ட கனவை அவள் யாரிடம் சொல்வாள்
இன்று ஊர் சொல்லும் வார்த்தையில் வேறிடம் செல்வாள்
வேறிடம் செல்வாள்
நாயகனின் நெஞ்சில் அவள் ஆசைகள் வைத்தாள்
அந்த நாயகனோ தாயகத்தை பூஜைகள் செய்தான்
கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி
சீதை கொண்ட ராமனுக்கே சஞ்சலமென்றால்
இந்த தேவியின் ராமனுக்கு நிம்மதி எங்கே
நிம்மதி எங்கே
காலமகள் ஜானகிக்கு ஆறுதல் சொன்னாள்
என் கண்மணிக்கும் அவளேதான் ஆறுதல் சொல்வாள்
கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி