Kaara Karuna |
---|
இசை அமைப்பாளர் : ரகுநந்தன்
கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
நாறா என நீ கிழிக்காதே
என நாளும் பொழுதும் விலகாத
தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என நீ நினைக்காத
என ராவும் பகலும் ஒதுக்காத
வந்தா தருவேன் வாடி சிட்டு
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு
இந்த நீ என ஏந்திக்கிட்டு
நல்ல தேதி பாத்து தாலி கட்டு
கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
நாறா என நீ கிழிக்காதே
என நாளும் பொழுதும் விலகாத
காங்கேயம் காளை உன்னால மூள
மாடாகி போறேனே மொத்ததில
மாராப்பு சேலை மச்சான் உன்னால
சூடாகி போகுது வெக்கத்துல
பொழுது சாயும் வரையில்
நீ புதையல் போல தெரிவ
ஏ பொழுது சாஞ்ச பிறகு
நீ அதையும் தேடி வருவ
பல தினுசா சினுங்கிடுவ
என முழுசா திருடி தின்னுடுவ
தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என நீ நினைக்காத
என ராவும் பகலும் ஒதுக்காத
மாந்தோப்பு குள்ள வாயேன்டி மெள்ள
நோகாம நான் தாரேன் பத்து புள்ள
ஆகாத சொல்ல நீ வீசி செல்ல
ஏதேதோ ஆனேனே பச்சப்புள்ள
எதையும் தாங்கும் இதயம்
உன் அழக பார்த்தா சரியும்
என் உறுதியான முடிவும்
நீ உரசி போனா முறியும்
எரியும் விளக்கு அணையும்
புது வெளிச்சம் இனிமே தான் தெரியும்
கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
நாறா என நீ கிழிக்காதே
என நாளும் பொழுதும் விலகாத
தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என நீ நினைக்காத
என ராவும் பகலும் ஒதுக்காத
வந்தா தருவேன் வாடி சிட்டு
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு
இந்த நீ என ஏந்திக்கிட்டு
நல்ல தேதி பாத்து தாலி கட்டு