Kaarirulae |
---|
காரிருளே காரிருளே
இதயத்தை துளைப்பதென்ன
உருவம் இல்லா குரல்கள் எல்லாம்
எனை எனை அழைப்பதென்ன
நேற்றுச் செய்த பிழை எல்லாம்
மூளைக்குள் கூச்சல் போட
பூமி எங்கும் அலைகிறேன்
ஒலியின்மை தேடியே
ஹேஹே ஹேஹேஹே
ஹே ஹே ஹே ஹேஏ ஹேஹே
சூழ் சூழ் எனைச் சூழ்
பூகங்காள் சூழ்
குமிலம் அமிலம்
முளரி முளரி உளமெங்கும் முளரி
புலரி புலரி எங்கெந்தன் புலரி
நானே என் மிருதத்தைச் சுமக்கின்ற உயிரி
உயிரி உயிரி
கண்ணீர் கண் மூடும் போது
கண்ணீர் கண் மூடும் போது
என்னை நான் பார்க்கின்றேனே
பெண்ணே பெண்ணே நீயே மன்னித்தாலும்
உண்மை என்னை கிழிக்குதே
நேற்று நான் கொண்ட காயம்
எல்லாம் நீ ஆற்றினாயே
நெஞ்சில் இன்றே காயம் ஏதும் இல்லை
ஆனால் இன்றோ வலிக்குதே
வலிக்குதேஏ
காரிருளே காரிருளே
இதயத்தை துளைப்பதென்ன
உருவம் இல்லா குரல்கள் எல்லாம்
எனை எனை அழைப்பதென்ன
நேற்றுச் செய்த பிழை எல்லாம்
மூளைக்குள் கூச்சல் போட
பூமி எங்கும் அலைகிறேன்
ஒலியின்மை தேடியே
ஹேஹே ஹேஹேஹே
ஹே ஹே ஹே ஹேஏ ஹேஹே