Kaarmegam Oorkolam Pogum |
---|
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட
மை விழி ஆனந்த காவியம் பாட
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
பார்த்தவை எல்லாம் கனவுகளா
பழகிய அன்பின் உறவுகளா
காதலின் ஆசை நினைவுகளா
வேதனை என்னும் சிலுவைகளா
தாங்காமல் நான் வாங்கி போய் வரவா
போய் வர நல்வாழ்த்து நீ தரவா
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
நாயகன் உந்தன் நினைவினிலே
நான் வரும் இந்த வழியினிலே
ஆயிரம் ரோஜா மலர் விரித்தால்
அமைதியில் தூங்கும் வரம் கொடுத்தாய்
நீ சொன்ன உன் வார்த்தை ஞாபகங்கள்
வாழ்க்கையில் என்ன என்ன நாடகங்கள்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
மாலையில் நீ வந்து மாலை சூட
மை விழி ஆனந்த காவியம் பாட
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்