Kaatre Yazh Meettu

Kaatre Yazh Meettu Song Lyrics In English


காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு இங்கு இன்பங்களே கானல் வரி துன்பங்களே நீலாம்பரி

காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு

மலர் ஆரங்களை தெரு ஓரங்களில் இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது மலர் ஆரங்களை தெரு ஓரங்களில் இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது

வெறும் கோவில்கள் எங்கெங்கும் ஆராதனை கொஞ்சம் கூறுங்கள் இவர் நெஞ்சில் ஏன் வேதனை ஆறாதோ நெஞ்சின் காயங்கள் எப்போது தெளிவாகும் நியாயங்கள்

காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு இங்கு இன்பங்களே கானல் வரி துன்பங்களே நீலாம்பரி

காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு


இங்கு கங்கை உண்டு கொஞ்சம் தண்ணீர் இல்லை வயல் எங்கும் உண்டு உண்ண சோறும் இல்லை

இங்கு கங்கை உண்டு கொஞ்சம் தண்ணீர் இல்லை வயல் எங்கும் உண்டு உண்ண சோறும் இல்லை

இந்த தேசத்தை துன்பங்கள் ஆள்கின்றன வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன யாரிங்கே ஒரு ஆதாரம் தருமங்கள் தெருவெங்கும் வியாபாரம்

காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு இங்கு இன்பங்களே கானல் வரி துன்பங்களே நீலாம்பரி

காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு