Kaatrinilae Varum Geetham

Kaatrinilae Varum Geetham Song Lyrics In English


காற்றினிலே
ஏஏஏவரும் கீதம்
காற்றினிலே

காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே நெஞ்சினில்
இன்ப கனலை எழுப்பி
நினைவளிக்கும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தார கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்


காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் காலமெல்லாம்
அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்

காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே