Kaatru Vaanga Ponen |
---|
காற்று வாங்க
போனேன் ஒரு கவிதை
வாங்கி வந்தேன் நான்
அதைக் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்
நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்
அதைக் கேட்டு
வாங்கி போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்
நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்
என் உள்ளம்
என்ற ஊஞ்சல் அவள்
உலவுகின்ற மேடை
என் பார்வை
நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற
ஓடை
அவள் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்
நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்
நடை பழகும்போது
தென்றல் விடை சொல்லி
கொண்டு போகும்
அந்த அழகு
ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக்
கொண்டு போகும்
அவள் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்
நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்
நல்ல நிலவு
தூங்கும் நேரம் அவள்
நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி
நின்ற போதும் இந்த
இதயம் தாங்கவில்லை
காற்று வாங்க
போனேன் ஒரு கவிதை
வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்
நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்