Kaatru Vandhal

Kaatru Vandhal Song Lyrics In English


காற்று வந்தால்
தலை சாயும்
நாணல்
காதல் வந்தால்
தலை சாயும்
நாணம்

ஆற்றினிலே
கரைபுரளும்
வெள்ளம்
ஆசையிலே
கரை புரளும்
உள்ளம்

ஆடை தொட்டு
விளையாடும்
தென்றல்
ஆசை தொட்டு
விளையாடும்
கண்கள்

ஒருவர் மட்டும்
படிப்பதுதான்
வேதம்
இருவராக
படிக்க சொல்லும்
காதல்

காற்று வந்தால்
தலை சாயும்
நாணல்
காதல் வந்தால்
தலை சாயும்
நாணம்

மழை வருமுன்
வானை மூடும்
மேகம்
திருமணத்துக்கு
முன் மனதை மூடும்
மோகம்

ஓடி வரும்
நாடி வரும் உறவு
கொண்டு தேடி வரும்
உயிர் கலந்து சேர்ந்து
விடும்
மானும்

பாடி வரும்
பருவ முகம் பக்கம்
வந்து நின்றவுடன்
பாசத்தோடு சேர்ந்து
கொள்வேன்
நானும்
நானும்
நானும்

காற்று வந்தால்
தலை சாயும்
நாணல்
காதல் வந்தால்
தலை சாயும்
நாணம்


ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

அஞ்சி அஞ்சி
நடந்து வரும்
அன்னம்
அச்சத்திலே
சிவந்து விடும்
கன்னம்

கொஞ்சிவரும்
வஞ்சி முகம் கோபுரத்து
கலசமென அந்தி வெயில்
நேரத்திலே
மின்னும்

மின்னி வரும்
நேரத்திலே மேனி
கொண்ட பருவத்திலே
முன்னிருந்தால் தோற்று
விடும்
பொன்னும்

உள்ளம்
துள்ளும்

காற்று வந்தால்
தலை சாயும்
நாணல்
காதல் வந்தால்
தலை சாயும்
நாணம்

ஆண் & ஆஹா
ஹாஹா ஆஆ ஆஹா
ஹாஹா ஆஆ ஹா