Kaatrum Poovum Paadum

Kaatrum Poovum Paadum Song Lyrics In English


காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ
காதில் கேட்கிறதா
அலை எழுதும் கவிதை இது
அது தினமும் அழுகிறது

காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ
காதில் கேட்கிறதா

காவிரி என்றால்
கரையில் அடங்கும்
கடலினைத் தேடி
முடிவில் ஒடுங்கும்
காதலின் எண்ணம்
அடங்குவதில்லை
அடங்கிட நானும்
காவிரி இல்லை

வார்த்தையில் சொல்ல
வாய் வரவில்லை
வந்தென்னைக் கூட நீ வரவில்லை
வாடும் இவளோ கொடி முல்லை

காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ
காதில் கேட்கிறதா


வழியைத் தேடும்
இவள் ஓர் பறவை
வகை தெரியாமல்
வளர்த்தாள் உறவை
தனி இடம் தேடி தினம்
அழலானாள்
வெயிலினில் வாடி
இவள் சருகானாள்

கனவினில் தானே
வாழுகிறாள்
கண்ணில் வரும் நீராடுகிறாள்
காதல் சோகம் பாடுகிறாள்

காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ
காதில் கேட்கிறதா
அலை எழுதும் கவிதை இது
அது தினமும் அழுகிறது

காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ
காதில் கேட்கிறதா