Kadalile Ezhugira

Kadalile Ezhugira Song Lyrics In English


கடலிலே
எழும்புற அலைகளை
கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள்
கூறிடும் ஓ மானே

கடல் தண்ணி கரிக்கிது
காரணம் இருக்குது ஓ மானே
உடல் விட்ட வேர்வைகள்
கடல் வந்து கலக்குது ஓ மானே

தையாரே
தையர தையர
தையா தையா
தையாரே
தையர தையர
தையா தையா

பூமரங்கள் எத்தனையோ
பூமியில காய்க்குது
பாய்மரந்தான் நாங்க கொண்ட
பட்டினிய தீர்க்குது

பிள்ளைகுட்டி எங்களுக்கு
பாச வலை வீசுது
எங்க சனம் மீன் பிடிக்க
ஈர வலை வீசுது

ஊரை நம்பி வாழ்ந்திடாமே
நீரை நம்பி வாழுறோம்
கால் பிடிச்சு வாழ்ந்திடாமே
மீன் பிடிச்சு வாழுறோம்
மானேஓமானேஓ

கடலிலே
எழும்புற அலைகளை
கேளடி ஓமானேஓ

தையாரே
தையர தையர
தையா தையா
தையாரே
தையர தையர
தையா தையா

குடிசைக்கு குலவிளக்கு
வேணுமுன்னு மாமா கேட்டிருக்கு
ஆமாம்மா ஆமாம்மா
ஆமாம்மா


குலவிளக்கு அதுக்குன்னு
மச்சான் போயி நிலவ கூட்டிவர
ஆமாம்மா ஆமாம்மா
ஆமாம்மா
குடிசைகளும் ஜொலிக்குது தானா
இப்போ அதிசயம்தான்
நடக்குது தானா

தூரக்கடல் போனவனை
தாரம் நின்னு தேடுவா
தோணி வந்து சேரும் வரை
ஆடியே அல்லாடுவா

பெத்தெடுத்த பிள்ளையுடன்
தத்தளிச்சு வாடுவா
நெத்திப் பொட்டை காக்க சொல்லி
சாமிகளை வேண்டுவா

மீனவர்கள் வாழ்க்கை என்றும்
முள்ளு மேல வாழைதான்
சூரக்காத்து ஆட்டி வைக்கும்
சின்ன தென்னம்பாலைதான்
மானேஓமானேஓ

கடலிலே
எழும்புற அலைகளை
கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள்
கூறிடும் ஓ மானே

கடல் தண்ணி கரிக்கிது
காரணம் இருக்குது ஓ மானே
உடல் விட்ட வேர்வைகள்
கடல் வந்து கலக்குது ஓ மானே

தையாரே
தையர தையர
தையா தையா
தையாரே
தையர தையர
தையா தையா

கடலிலே
எழும்புற அலைகளை
கேளடி ஓமானேஓ