Kadalirandu Thuliyirandai |
---|
கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்
உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ
உடனிருப்பை உணர்வதுதான் காதலா
உயிரதுவாய் மறைப்பொருளாய் வாழ்கிறேன்
மறைவதற்குள் மணம் திறக்கும்
மலரதுவின் மகிழ்வோ
நிமிட முள்ளில் வருடங்களை
கடந்துவிட்டோம் விரைவாய்
விஷம் பரவும் வீரியத்தில்
விரவி விட்டாய் நிலையாய்
உன் இச்சைகளில் மோட்சங்களை
அடைந்துவிட்டேன் நிறைவாய்
கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்
உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ
உடனிருப்பை உணர்வதுதான் காதலா
உயிரதுவாய் மறைப்பொருளாய் வாழ்கிறேன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஓஓஒஹ்ஓஓஒஹ்ஓஓஒஹ்ஓஓஒஹ்