Kadalirandu Thuliyirandai

Kadalirandu Thuliyirandai Song Lyrics In English




கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்
உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ
உடனிருப்பை உணர்வதுதான் காதலா
உயிரதுவாய் மறைப்பொருளாய் வாழ்கிறேன்

மறைவதற்குள் மணம் திறக்கும்
மலரதுவின் மகிழ்வோ
நிமிட முள்ளில் வருடங்களை
கடந்துவிட்டோம் விரைவாய்

விஷம் பரவும் வீரியத்தில்
விரவி விட்டாய் நிலையாய்
உன் இச்சைகளில் மோட்சங்களை
அடைந்துவிட்டேன் நிறைவாய்


கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்
உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ
உடனிருப்பை உணர்வதுதான் காதலா
உயிரதுவாய் மறைப்பொருளாய் வாழ்கிறேன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஓஓஒஹ்ஓஓஒஹ்ஓஓஒஹ்ஓஓஒஹ்