Kadavul Manithanaga |
---|
கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்
கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்
கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
எத்தனை பெண் படைத்தான்
எல்லோருக்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையென்னும் விஷம் கொடுத்தான்
அதை ஊரெங்கும்
தூவிவிட்டான்
உள்ளத்திலே பூசிவிட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு
உயரத்திலே தங்கிவிட்டான்
கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவைத்து பார்த்திருப்பேன்
படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவி அவன் பெண் குலத்தை
படைக்காமல் நிறுத்தி வைப்பான்
கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்