Kadavul Yen Kallanan

Kadavul Yen Kallanan Song Lyrics In English


கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

கொடுமையை
கண்டவன் கண்ணை
இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன்
சொல்லை இழந்தான்

இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை
இழந்தான்

இங்கு
எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை
இழந்தான் எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை இழந்தான்

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

நெஞ்சுக்கு
தேவை மனசாட்சி
அது நீதி தேவனில்
அரசாட்சி

அத்தனை
உண்மைக்கும் அவன்
சாட்சி
மக்கள் அரங்கத்தில்
வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது
அவன் சாட்சி


கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

சதி செயல்
செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன்
குற்றவாளி

உண்மையை
சொல்பவன் சதிகாரன்
இது உலகத்தில்
ஆண்டவன் அதிகாரம்

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே