Kadavulukku Manithanidam |
---|
கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை
அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள
வகையில்லைமொழியில்லை
கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை
அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள
வகையில்லைமொழியில்லை
காட்சிகளை முன்னால் வைத்து
கண்ணைப் பறிப்பான்
அவன் கடந்து போக வழியை வைத்து
கால்களை கேட்பான்
பசியில்லாத வயிற்றின் முன்னே
உணவை படைப்பான்
சோற்றை பார்த்திருக்கும் ஏழை முன்னே
வறுமையை வைப்பான்
வறுமையை வைப்பான்
வறுமையை வைப்பான்
கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை
அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள
வகையில்லைமொழியில்லை
தேய்பிறைக்கு பின்னாலே வளர்பிறை
எந்த ஜீவனுக்கும் வாழ்க்கையுண்டு ஒரு முறை
தேய்பிறைக்கு பின்னாலே வளர்பிறை
எந்த ஜீவனுக்கும் வாழ்க்கையுண்டு ஒரு முறை
சாய்ந்த மரம் தழைப்பதுண்டு தன் வரை
சாய்ந்த மரம் தழைப்பதுண்டு தன் வரை
தம்பி தைரியம்தான் வேண்டும் காலம் வரும் வரை
கால்கள் வரும் வரைஉன் கால்கள் வரும்வரை
கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை
அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள
வகையில்லைமொழியில்லை