Kadhal Geetham

Kadhal Geetham Song Lyrics In English


காதல் கீதம் கேட்குமா
என் கவலை யாவும் நீங்குமா
காதல் கீதம் கேட்குமா
மீண்டும் காதல் கீதம் கேட்குமா
என் கவலை யாவும் நீங்குமா
காதல் கீதம் கேட்குமா

தனிமை என்னும் தீயிலே
நான் தவித்து வாடும் போதிலே
தனிமை என்னும் தீயிலே
நான் தவித்து வாடும் போதிலே

கனவில் பாடும் கானம் போலே
ஏஏஏஏஏஏ
கனவில் பாடும் கானம் போலே
இனிமையோடும் எனை அழைத்த
காதல் கீதம் கேட்குமா


கள்ளம் இல்ல காதலுக்கே
கரை அமைத்தார் தந்தையே
தள்ளி செல்ல வழி இல்லாமல்
தடைகள் வந்ததும் விந்தையே

எல்லை இல்லா அன்பு வடிவை
எதிரில் காணா நிலையிலும்
இதயம் பாடும் கானம் போலே
ஏஏஏஏஏஏ
இதயம் பாடும் கானம் போலே
எங்கிருந்தோ எனை அழைத்த
காதல் கீதம் கேட்குமா
என் கவலை யாவும் நீங்குமா
காதல் கீதம் கேட்குமா