Kadhal Nila Theinthatho |
---|
ஓஒஹ்ஓஓஒஹ்ஓஓஓஓ
காதல் நிலா தேய்ந்ததோ
பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ
ஓஒஹ்ஓஓஒஹ்ஓஓஓஓ
ஆகாயமே மேகமே ஊர்கோலம்
நான் கொண்ட சோகம் கூறுங்கள்
இதைத்தானோ தேவன் நினைத்தான்
காதல் நிலா தேய்ந்ததோ
பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ
நீர்க்கோலமே காதல்தான் வேறல்ல
யார் மாலை யார் தோளில் யார்தான் சொல்ல
ஆசைகளே மாயம்தான் மெய்யல்ல
கண் காணும் கானல் நீர் கங்கையல்ல
நெடுந்தூரமே போகலாம் நீலமேகம்
நீரின்றியே வாடலாம் சோலை பூவும்
இதைத்தானோ தேவன் நினைத்தான்
காதல் நிலா தேய்ந்ததோ
பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ
பூப்பூக்கலாம் யாவுமே காய்க்காது
மண் போட்ட விதையெல்லாம் முளைக்காது
நீ கேட்கலாம் யாவுமே கிடைக்காது
இதைத்தானே வாழ்வில் நம் விதியென்பது
உன் வீணையில் கேட்கலாம் சோககீதம்
உன் பாடலில் சேரலாம் வேறு ராகம்
இதைத்தானோ தேவன் நினைத்தான்
காதல் நிலா தேய்ந்ததோ
பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ
இதைத்தானோ தேவன் நினைத்தான்
காதல் நிலா தேய்ந்ததோ
பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ