Kadhal Nilave

Kadhal Nilave Song Lyrics In English


காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல்தான் ஆட
அதன் மேலே நான் ஆட
இள மாலை நேரம் தான்

காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா

ஏட்டில் ஒரு பாவலன்
எழுதாத காவியம்
நாட்டில் ஒரு தூரிகை
புனையாத ஓவியம்

நீ வளர்க்க என் கண்
தேடுது உன் சொந்தம்
தேன் வளர்க்க என்
வாய் பாடுது உன் சந்தம்

நீராடும் ஓடையே எனக்கென
குளிர் சேர்க்கும் வாடையே
மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே
அன்பே வா ஆஆ ஆ

காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல்தான் ஆட
அதன் மேலே நான் ஆட
இள மாலை நேரம் தான்

காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா


நாளும் உனைக் கூவிடும்
குயிலாக பூங்குயில்
நீயும் எனை வாட்டினால்
உறவேது பூமியில்

நான் விரும்பும் பொன்
மான் தாமரை நெஞ்சம்
நாள் முழுக்க
என் மேல் சாய்ந்திடக் கெஞ்சும்

சேராது உன் மடி
தனிமையில் தூங்காது பூங்கொடி
கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே
அன்பே வா ஆஆஆ

காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா

மணி ஊஞ்சல்தான் ஆட
அதன் மேலே நான் ஆட
இள மாலை நேரம் தான்

காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா