Kadhal Piriyamal

Kadhal Piriyamal Song Lyrics In English


காதல் பிரியாமல்
கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல்
கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே

என்னை கவியாய்ச்
செய்வாயா இல்லை
கனியாய்ச் செய்வாயா
பழி போடும் பாவையே

காதல் பிரியாமல்
கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல்
கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே

என்னை கவியாய்ச்
செய்வாயா இல்லை
கனியாய்ச் செய்வாயா
பழி போடும் பாவையே

நாயகி என்னை நீங்கியதாலே
வீடு வெறிச்சோடிப் போச்சு
நாற்புரம் கண்ணீர் சூழ்ந்ததனாலே
கட்டில் தீவாக ஆச்சு

மணமாகும் முன்பு
கண்ணன் நானே
மணமான பின்பு ராமன்தானே

அடி சீதை நீ சொன்னால்
இந்த ராமன் தீக்குளிப்பேன்
இல்லை காற்றில் உயிர் கலப்பேன்


ஓஒ ஹோ ஓஒ
ஓஒ ஹோ ஓஒ
ஓஒ ஹோ ஓஒ

காண்பவை எல்லாம்
பிழை என்று கொண்டால்
வாழ முடியாது பெண்ணே
கயிறுகள் எல்லாம்
பாம்பெனக் கண்டால்
கண்கள் உறங்காது கண்ணே

என் போர்வையோடு உந்தன் ரத்தம்
என் கண்களோடு கண்ணீர் தெப்பம்
வலையோடு தண்ணீர் நிற்குமா
உயிர் நீங்கி உடல் நிற்குமா
உந்தன் ஊடல் தீருமா ஆஆ

காதல் பிரியாமல்
கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல்
கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே

என்னை கவியாய்ச்
செய்வாயா இல்லை
கனியாய்ச் செய்வாயா
பழி போடும் பாவையேஏ

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்