Kadhal Thirudaa |
---|
காதல் திருடா
பெரிய காதல் திருடா
காதல் திருடி
இனிய காதல் திருடி
கவிஞரின் பாட்டைத் திருடி
மாற்றிப் புரட்டிப் போட்டுப் பாடாதே
யாரோ இப்படி பாடச் சொன்னது
ரோட்டில் ஆட்டம் போடச் சொன்னது
காதல் திருடி
இனிய காதல் திருடி
காதல் திருடா
பெரிய காதல் திருடா
மாங்கல்யம் தந்துனானேனா
மமஜீவன ஹேத்துனா
கண்டேபத்நாமி சுபகே
தவம்ஜீவ சரதா சதம்
பள்ளி செல்லும் நாளிலே
ஈயடிச்சான் காப்பிதான்
சொல்லித் தந்தும் ஏறலே
ஒண்ணும் இல்லே மேலேதான்
அன்று வந்த உன் குணம்
இன்றும் மாறவில்லையோ
கன்னிப் பெண்ணை பார்த்ததும்
நெஞ்சில் என்ன தொல்லையோ
பூட்டு போட்டுத்தான்
பூட்டிப் பாக்குறேன்
பொங்கும் ஆசைதான்
அடங்கவில்லையே
காதலாகிச் சேர்ந்த பின்பும்
கண்டுக்காம கம்பி நீட்டும் திருடா
ரம்பம்பம் பம்பம்பம்
காதல் திருடி
இனிய காதல் திருடி
காதல் திருடா
பெரிய காதல் திருடா
கவிஞரின் பாட்டைத் தவிர
மாற்று பாட்டு பாடத் தெரியாது
காதல் வந்தால் ஆடத்தோணுது
காவல் தாண்டி ஆடத்தோணுது
காதல் திருடா
பெரிய காதல் திருடா
காதல் திருடி
இனிய காதல் திருடி
கன்னி அறியாமலே
கன்னமிட்ட கள்வனே
என்னை அறியாமலே
கொள்ளையிட்டதென்னவோ
காதல் என்ற ஒன்றுதான்
கேட்டு வாங்கக் கூடுமோ
கன்னி இல்லை என்றுதான்
இன்று சொல்லக் கூடுமோ
எந்த ஜென்மமோ
எழுதி வைத்தது
இந்த நாளிலே ஒன்று ஆனது
பிள்ளை கூட
என்னைப் போல
பொறுக்கியாக பொறந்து
போச்சு திருடி
அய்யய்ய யய்யய்யோ
காதல் திருடி
பெரிய காதல் திருடா
காதல் திருடி
பெரிய காதல் திருடா
இருவரும் ஆட்டைத் திருடி
மாட்டைத் திருடி
பாட்டை புடிச்சாச்சா
பாடும் ராகம் இல்லாமல்
பாப்பா நான்தான்
இங்கே கொதிக்கும்
காதல் திருடி
பெரிய காதல் திருடா
காதல் திருடி
பெரிய காதல் திருடா
ஹஹஹஹாஹா