Kakithathil Kappal

Kakithathil Kappal Song Lyrics In English


காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்

காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்

மானம் என்ற பொருள் காக்க
மனக்கதவை மூடி வைத்தேன்
மானம் என்ற பொருள் காக்க
மனக் கதவை மூடி வைத்தேன்

நாலு பக்கம் திறந்து கொண்டால்
நான் அதற்கு என்ன செய்வேன்
நான் அதற்கு என்ன செய்வேன்

காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்

முள் நடுவே மலர் வளர்த்து
முடியும் வரை காத்திருந்தேன்
முள் நடுவே மலர் வளர்த்து
முடியும் வரை காத்திருந்தேன்

மலர் பறிக்கும் வேளையிலே
முள் தைத்த கதையானேன்
முள் தைத்த கதையானேன்


காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்

தாய் முகத்தை பார்க்காமல்
யார் முகத்தை பார்த்தழுவேன்
தாய் முகத்தை பார்க்காமல்
யார் முகத்தை பார்த்தழுவேன்

நீ கொடுத்த நிழலை விட்டு
யார் நிழலில் போய் இருப்பேன் அம்மா
யார் நிழலில் போய் இருப்பேன்

காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்