Kalai Nila Aadinal |
---|
பாடலாசிரியர் : மாதுரி பச்சையப்பன்
ஓம்குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரஹா குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா
மாறன் கணையால் மயங்குகின்ற ஊர்வசியாள் மன்னன் விக்ரமாதித்தனின் தோள் கண்டாள் மையல் கொண்டாள் துவளுகின்றாள்
கலை நிலா ஆடினாள் கலை நிலா ஆடினாள் கயல் விழி காதல் நதியினில் ஆட கயல் விழி காதல் நதியினில் ஆட கரும்பென்னும் வில்லேந்தி காமன் செய்த லீலையால்
கலை நிலா ஆடினாள் கலை நிலா ஆடினாள் கயல் விழி காதல் நதியினில் ஆட கயல் விழி காதல் நதியினில் ஆட கரும்பென்னும் வில்லேந்தி காமன் செய்த லீலையால்
கலை நிலா ஆடினாள் கலை நிலா ஆடினாள்
கார்முகிலாம் குழல் காற்றினிலாடிட கால்கள் தள்ளாட
கார்முகிலாம் குழல் காற்றினிலாடிட கால்கள் தள்ளாட காவிய நாயகன் பேரழகில் அவள் நெஞ்சம் சதிராட கனியிசை பாட கான் மயில் வாட கனியிசை பாட கான் மயில் வாட கரும்பென்னும் வில்லேந்தி காமன் செய்த லீலையால்
கலை நிலா ஆடினாள் கலை நிலா ஆடினாள் கயல் விழி காதல் நதியினில் ஆட கயல் விழி காதல் நதியினில் ஆட கரும்பென்னும் வில்லேந்தி காமன் செய்த லீலையால்
கலை நிலா ஆடினாள் ஆடினாள் ஆடினாள் ஆடினாள் கலை நிலா ஆடினாள்
முத்து பனி மலர் கொத்தும் மதியமும் கத்தும் கருங்குயிலும் சத்தம் எழு கடல் கத்தும் கிளி மொழி மெத்தை தரும் சுகமும்
முத்து பனி மலர் கொத்தும் மதியமும் கத்தும் கருங்குயிலும் சத்தம் எழு கடல் கத்தும் கிளி மொழி மெத்தை தரும் சுகமும் கன்னியை வாட்டும் கடும் பகையாக கன்னியை வாட்டும் கடும் பகையாக கரும்பென்னும் வில்லேந்தி காமன் செய்த லீலையால்
கலை நிலா ஆடினாள் கலை நிலா ஆடினாள் கயல் விழி காதல் நதியினில் ஆட கயல் விழி காதல் நதியினில் ஆட கரும்பென்னும் வில்லேந்தி காமன் செய்த லீலையால்
கலை நிலா ஆடினாள் கலை நிலா ஆடினாள்