Kalai Vantha Vitham |
---|
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கலை வந்த விதம் கேளு கண்ணே
காற்றினிலே பிறந்து ஒலியானது
அது காட்டுப் புல்லில் நுழைந்து இசையானது
காற்றினிலே பிறந்து ஒலியானது
அது காட்டுப் புல்லில் நுழைந்து இசையானது
மாட்டிட என் கையில் குழலானது
மாட்டிட என் கையில் குழலானது
குழந்தை வாயினிலே நுழைந்து மொழியானது
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கலை வந்த விதம் கேளு கண்ணே
உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது
உயிரின் உணர்ச்சியிலே சுருதி லயமானது
உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது
உயிரின் உணர்ச்சியிலே சுருதி லயமானது
தெள்ளுத் தமிழ் குழந்தை எழிலானது
தெள்ளுத் தமிழ் குழந்தை எழிலானது
அதன் தித்தித்தை தித்தித்தை
தித்தித்தை என்ற நடை சதிரானது
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கலை வந்த விதம் கேளு கண்ணே